திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.110 திருத்தூங்கானை மாடம் (பெண்ணாடம்) - திருவிருத்தம்
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு
    விண்ணப்பம் போற்றிசெய்யும்
என்னாவி காப்பதற் கிச்சையுண்
    டேலிருங் கூற்றகல
மின்னாரு மூவிலைச் சூலமென்
    மேற்பொறி மேவுகொண்டல்
துன்னார் கடந்தையுள் தூங்கானை
    மாடச் சுடர்க்கொழுந்தே.
1
ஆவா சிறுதொண்ட னென்நினைந்
    தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன்
    மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீநென்னைப்
    பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுள் தூங்கானை
    மாடத்தெம் புண்ணியனே.
2
இப்பதிகத்தில் மூன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
3
இப்பதிகத்தில் நான்காம் செய்யுள் சிதைந்து போயிற்று.
4
இப்பதிகத்தில் ஐந்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
5
இப்பதிகத்தில் ஆறாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
6
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
7
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
8
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
9
கடவுந் திகிரி கடவா
    தொழியக் கயிலையுற்றான்
படவுந் திருவிர லொன்றுவைத்
    தாய்பனி மால்வரைபோல்
இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள்
    ளாயிருஞ் சோலைதிங்கள்
தடவுங் கடந்தையுள் தூங்கானை
    மாடத்தெந் தத்துவனே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com